;
Athirady Tamil News

கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு

0

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக உப்புல செனவிரத்ன பதவியேற்றுள்ளார்.

கிளிநொச்சி – இரணைமடுவில் அமைந்துள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இன்று (12.0.2023) காலை பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

பொலிஸ்மா அதிபர்
சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்று மதத் தலைவர்களின் ஆசியைப் பெற்றுக் கொண்ட பின்னர் வைபவ ரீதியாக காலை 10.00 மணி அளவில் பிரதி பொலிஸ்மா அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இன்றைய பதவியேற்பு நிகழ்வில் கிளிநொச்சி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மற்றும் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.