;
Athirady Tamil News

இலங்கையில் 9 ஈரானியர்களுக்கு ஆயுள் தண்டனை!

0

நான்கு வருடங்களுக்கு முன்னர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஈரானிய பிரஜைகள் 9 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இலங்கைக்கு ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் நால்வரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை செய்து கொண்ட சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இணங்க செயற்படும் வகையில், ஒன்பது வெளிநாட்டு பிரஜைகளையும் ஈரானுக்கு நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம், அக்குரலைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் இழுவை படகில் இருந்த ஒன்பது ஈரானிய பிரஜைகள் ஒரு பெரிய ஹெரோயின் போதைப்பொருளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.