;
Athirady Tamil News

காசா பகுதியில் வசிக்கும் இலங்கையர்கள் வெளியேற்றம்

0

பாலஸ்தீனத்தில் உள்ள இலங்கை பிரதிநிதி அலுவலகம், செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து காசா பகுதியில் வசிக்கும் இலங்கையர்களை வெளியேற்றும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளது.

இந்தநிலையில், காசா பகுதியில் மூன்று குடும்பங்கள் உட்பட 17 இலங்கையர்கள் வசித்து வருவதாக அலுவலகத்தின் தலைவர் பென்னட் குரே தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் வெளியேற்றம்
இதில், ஒரு குடும்பம் 23 ஆண்டுகளுக்கும் மேலாக குறித்த பகுதியில் வசிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவர்கள் பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், அவர்கள் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் குரே அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.