உக்ரைனில் தொடரும் சோகம்! ரஷியாவின் வான் வழி தாக்குதலில் 2 வயது குழந்தை உள்பட மூவர் பலி!
கீவ் : உக்ரைனில் ரஷியா நடத்திய வான் வழி தாக்குதலில் 2 வயது குழந்தை உள்பட மூவர் கொல்லப்பட்டனர்.
ஒடேசா நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகமொன்றை ரஷியாவின் ட்ரோன் ஒன்று இரவில் தாக்கியதில் அப்பகுதியில் இரண்டு பெண்களும் 2 வயது குழந்தையும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை(ஏப். 6) தெரிவித்தனர்.
அதில், இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் கர்ப்பிணியொருவரும் இரு குழந்தைகளும் படுகாயமடைந்து சிகிச்சை பெறுவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
ரஷியாவுக்கு பதிலடியாக தங்களிடமுள்ள நெடுந்தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி கருங்கடல் பகுதிகளில் உள்ள ரஷியாவின் எண்ணெய் ஏற்றுமதி துறைமுகங்களைக் குறிவத்து தாக்குதல்களை உக்ரைன் நடத்தியது.
உக்ரைனில் கடந்த 4 ஆண்டுகளைக் கடந்து நீடிக்கும் ரஷிய ராணுவ நடவடிக்கைகளால் உக்ரைன் எங்கிலும் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 15,000-ஐ கடந்திருப்பதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.