;
Athirady Tamil News

டிரம்ப் மிரட்டலைத் தொடர்ந்து ஈரான் மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்; 25 பேர் பலி!

0

அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டலைத் தொடர்ந்து ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் 25 பேர் பலியாகினர்.

அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஈரான் நகரங்கள் மீது நேற்று நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் மேலும் 25 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் நடத்தியத் தாக்குதலில் 2 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் அரசு நிலைகளின் மீதான தாக்குதல்கள் நிறைவடைந்ததாக இஸ்ரேல் தெரிவித்த போதும் இன்று மீண்டும் ஈரான் குடியிருப்புப் பகுதிகள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும், பல்கலைக்கழகம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தலைநகரான தெஹ்ரானில் சில பகுதிகளுக்கு எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளதாகவும் செய்தி வெளியானது.

முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹோர்முஸ் நீரிணையை 48 மணிநேரத்திற்குள் ஈரான் திறக்காவிட்டால் அவர்களை நரகத்திற்கு அனுப்புவதாக எச்சரித்த நிலையில், அவரது மிரட்டலை நிராகரிக்கும் விதமாக பிராந்தியம் முழுவதும் பேரழிவு ஏற்படும் என்று ஈரான் பதிலளித்துள்ளது.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட ஈரான் செய்தித் தொடர்பாளர், “பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால் எங்களின் அடுத்தகட்ட தாக்குதல்கள் மற்றும் நடவடிக்கைகளால் மிகப்பெரிய பேரழிவைச் சந்திக்க நேரும்” என்று எச்சரித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.