;
Athirady Tamil News

யானைகளின் உயிரைக் காப்பாற்ற கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

0

இலங்கையில் யானைகளின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு உரிய தரப்பினரிடம் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக சுற்றாடல் அமைப்பொன்றைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த நாட்களாக உயிரிழந்த யானைகளின் படங்களை ஏந்தியவாறும் பதாகைகளை பிடித்தவாறும் ஆர்ப்பாட்டத்தில் சுற்றாடல் அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் இன்று புதன்கிழமை (18) முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.