;
Athirady Tamil News

ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு உயர்வு – தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!

0

ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

வயது வரம்பு உயர்வு
ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்த வலியுறுத்தி ஆசிரியர் பணிக்கு பயிற்சி பெற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். சமீபத்தில் நடந்த ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக கோரிக்கையை முன்வைத்தனர்.

இதனையடுத்து “ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்த்தப்படும்” என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.

அரசாணை வெளியீடு
இந்நிலையில் இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில் ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் “ஆசிரியர் பணியில் சேர பொதுப்பிரிவினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 53ஆகவும், இதர பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 58ஆகவும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு பொது​ப்பிரிவினருக்கு 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 50 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.