;
Athirady Tamil News

யாழில். மாணவியை வீடியோ எடுத்த சந்தேக நபர் தலைமறைவு

0

மாணவி ஒருவர் குளிக்கும் போது கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் தேடி வருகின்றனர்.

யாழ்ப்பாணம் கோப்பாய் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் மாணவி ஒருவர் குளிக்கும் போது , குளியல் அறை, மேல் ஜன்னல் வழியாக கையடக்க தொலைபேசி ஒன்றினை கண்ட மாணவி சத்தமிட்டுள்ளார்.

அதனை அடுத்து பெற்றோர் அவ்விடத்திற்கு சென்ற போது , யாரும் அங்கு இருக்கவில்லை. வீட்டின் பின்புறம் வெளி நபர்கள் வருவதற்கான சாத்தியம் காணப்படாததால் , அயல் வீட்டு இளைஞன் மீது மாணவியின் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து , கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து , அயல் வீட்டு இளைஞனிடம் வாக்கு மூலம் பெற சென்ற போது , இளைஞன் தலைமறைவான விடயம் பொலிஸாருக்கு தெரியவந்தது.

அதனை அடுத்து பொலிஸார் சந்தேக நபரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.