;
Athirady Tamil News

தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி விசேட கொடுப்பனவு வழங்குமாறு இ.தொ.கா வலியுறுத்தல்

0

தோட்ட தொழிலாளர்களுக்கு நியாமான முறையில் தீபாவளி விசேட கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

தீபாவளி கொடுப்பனவுகள் குறித்து கம்பனியுடன் பேச்சுவார்த்தை நடத்திய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி விசேட கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

தீபாவளி கொடுப்பனவு
தோட்ட தொழிலாளர்கள் வருடம் முழுவதும் கம்பனிக்கு வருவாய் ஈட்டி கொடுக்கும் வகையில் கடினமாக உழைக்கின்றனர்.

அவர்கள் வருடத்தில் தைப்பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளை கொண்டாடிவரும் நிலையில், வருடம் முழுவதும் கம்பனிக்காக உழைக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கு நியாமான முறையில் தீபாவளி கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் எனவும் இவ்விடயத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பின்வாங்காது எனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை தீபாவளி விசேட கொடுப்பனவு வழங்குவது குறித்து இன்று அறிவிப்பதாக கம்பனி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.