;
Athirady Tamil News

களஞ்சியங்களிலிருந்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான நெல் மாயம்!

0

நெல் களஞ்சியசாலைகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான நெல் காணாமல் போயுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் உள்ளக ஊழியர்கள் குழுவொன்று அமைச்சரிடம் முறைப்பாடு செய்துள்ளது.

இது தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குருணாகல் மாவட்டத்தில் உள்ள ஐந்து நெல் களஞ்சியசாலைகளில் இவ்வாறு நெல் இருப்புக்கள் காணாமல் போயுள்ளன.

விவசாய அமைச்சர் உத்தரவு
இந்நிலையில் சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கையை மூன்று நாட்களுக்குள் வழங்குமாறு சந்தைப்படுத்தல் சபைத் தலைவருக்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர உத்தரவிட்டுள்ளார்.

அது தொடர்பான அறிக்கை கிடைத்தவுடன் முழுமையான விசாரணைக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.