;
Athirady Tamil News

நாட்டை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் – 14 சிறுவர்களுக்கு HIV தொற்று!

0

இந்தியாவில் உத்தர பிரதேசத்தில் இரத்தம் ஏற்றிக்கொண்ட 14 சிறுவர்களுக்கு HIV தொற்று ஏற்பட்டள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரத்தம் ஏற்றிய சிறுவர்கள்
உத்தர பிரதேசத்தில் கான்பூர் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு சிகிச்சை நடந்து வந்துள்ளது.

இதில் 6 முதல் 16 வயதுக்கு உட்பட்ட 14 சிறுவர்களுக்கு தானம் செய்யப்பட்ட ரத்தத்தை செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில், ரத்தம் ஏற்றப்பட்ட 14 குழந்தைகளுக்கு HIV தொற்று மற்றும் ஹெபடைடிஸ் நோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

2 பேர் HIV தொற்றாலும் 7 பேருக்கு ஹெபடைடிஸ் பி, 5 பேருக்கு ஹெபடைடிஸ் சி இருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் ரத்தத்தைப் பரிசோதிக்காமல் சிறார்களுக்கு செலுத்தியுள்ளதால் தொடர்ந்து வைத்தியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.