;
Athirady Tamil News

திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளராக பொறுப்பேற்ற கயல்விழி!

0

திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் பி.கயல்விழி கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

குறித்த வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பதவிக்கு வருடார்ந்த இடமாற்றத்தின் அடிப்படையிலும் தகுதியின் அடிப்படையிலும் பி.கயல்விழி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதனடிப்படையில் அவர் தனது கடமைகளை இன்றையதினம் (25-10-2023) பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இவர் இதற்குமுன்னர் மூதூர் தள வைத்தியசாலையின் அத்தியட்சகராகவும், திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை வைத்தியசாலையில் பல்வேறுபட்ட குறைபாடுகள் நிலவுவதாகவும் அவை சீர் செய்யப்பட்டு நோயாளர்களுக்கு சிறந்த சேவையினை வழங்க வேண்டும் எனவும் அதற்காக குறித்த பிரதிப்பணிப்பாளர் செயற்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்த நிலையில் குறித்த பதவியேற்பு நிகழ்விற்கு ஊடகவியலாளர் சென்றிருந்த போதிலும் கடமையேற்பதை புகைப்படம் எடுப்பதற்கு விருப்பம் தெரிவிக்கப்படவில்லையெனவும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.