;
Athirady Tamil News

விசா அனுமதி பத்திரத்தை புதுப்பிக்க 1,680 விண்ணப்பங்கள் : இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர்

0

விசா அனுமதி பத்திரத்தை புதுப்பிப்பதற்காக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்திற்கு ஆயிரத்து 680 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்நாட்டுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

தொலைக்காணொளி ஊடாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

சட்டவிரோத விசா அனுமதி
“சட்டவிரோத விசா அனுமதி பத்திரத்தின் ஊடாக இஸ்ரேலுக்குள் நுழைந்த இரண்டாயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் உள்ளனர்.

அதேநேரம் ஹமாஸ் தரப்பினரால் பணயக் கைதிகளாக அழைத்து செல்லப்பட்டுள்ளவர்களில் இலங்கையர்கள் அடங்குவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.

எவ்வாறாயினும் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியல் எதுவும் வெளியாகவில்லை.” என வலியுறுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.