;
Athirady Tamil News

நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட சனத் நிஷாந்த

0

நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சாவுக்கு கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பில் அதிக அறிவு இருந்ததாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த விடயங்களில் லன்சாவின் நிபுணத்துவம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை விட அதிகமாக இருக்கும் என இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதில் லன்சாவின் பங்கு இருந்ததாக இராஜாங்க அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

போதைப்பொருள்
போதைப்பொருள் இருப்பதாகக் கூறப்படும் தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடிப் படையினர் லன்சாவின் வீட்டில் சோதனை நடத்திய குறிப்பிட்ட சம்பவம் ஒன்றையும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச லன்சாவை பாதுகாப்பதற்காக தலையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

அத்துடன் இதுவே மகிந்த ராஜபக்சவின் தோல்விக்கு நேரடியாக பங்களித்தது என்ற கருத்தும் நிலவியதாக சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.