;
Athirady Tamil News

மொட்டு கட்சி எடுத்த அதிரடி தீர்மானம் : கடுமையாக தண்டிக்கப்படவுள்ள கட்சி உறுப்பினர்கள்

0

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை மீறி செயற்படும் தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க கட்சி தீர்மானித்துள்ளது.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து, அதன் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச இது தொடர்பான அறிவிப்பை மேற்கொண்டுள்ளார்.

அத்துடன், தற்போது சுயாதீனமாக செயல்படும் தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு பக்க அரசியல்
இரு கால்களையும் இரு பக்கத்தில் வைத்து அரசியலில் பயணிக்கும் தரப்பினர் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென பசில் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், குறித்த தரப்பினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு துரோகம் இழைத்துள்ள தரப்பினரை கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.