;
Athirady Tamil News

கோழி இறைச்சிக்குள் காணப்பட்ட அபாய பொருள்

0

கோழி இறைச்சிக்குள் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்து களுத்துறை சிறைச்சாலையில் உள்ள கைதியை பார்க்கச்சென்ற நபர் ஒருவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொணபொல, படுவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் குற்றச்சாட்டு
இவர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மூன்று கைதிகளை உணவுப்பொதிகளுடன் பார்வையிட களுத்துறை சிறைச்சாலைக்கு சென்ற நிலையில், பொலிஸார் உணவுப் பொதிகளை சோதனையிட்ட போது கோழி இறைச்சிக்குள் ஐஸ் போதைப்பொருள் மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.

பின்னர் அந் நபர் களுத்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.