;
Athirady Tamil News

அரசியல்வாதி பயணித்த வாகனத்தால் கணவன் மனைவிக்கு நேர்ந்த துயரம்

0

திருகோணமலை – மட்டக்களப்பு ஏ15 பிரதான வீதி கிளிவெட்டி 58ஆம் கட்டை பகுதியில் கெப் வாகனமும், முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இச்சம்பவம் இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது. இதில் முச்சக்கரவண்டியில் பயணித்த கணவர், மனைவி இருவரும் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கணவர், மனைவி இருவரும் படுகாயம்
விபத்தில் தெகிவத்தை- மந்தனபுர பகுதியில் வசித்து வரும் டபிள்யூ.எம்.சேனககு பண்டார (39 வயது) மற்றும் அவரது மனைவி எச்.எம்.நிலந்தி (34 வயது) ஆகியோரே இவ்விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி பிரபல அரசியல்வாதி ஒருவர் பயணித்த கெப் ரக வாகனமே, முச்சக்கரவண்டியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.