;
Athirady Tamil News

யாழில் தனியார் விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட ஆண் தொடர்பில் வெளியான தகவல்!

0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் கொட்டடிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் (05-11-2023) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சடலமாக மீட்கப்பட்டவர் தென்னிலங்கையை சேர்ந்த 61 வயதுடைய லால் பெரேரா என்கிற சிங்களவர் என தெரியவந்துள்ளது.

குறித்த விடுதியில் 3 நாட்களாக தங்கி இருந்த நிலையில் அறைக்கு வெளியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அந்த விடுதி உரிமையாளரால் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.