;
Athirady Tamil News

பிரியாணிக்குள் கிடந்த தலை : வாங்கியவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

0

பிரியாணி வாங்கிய ஒருவர் அதனை குடும்பத்துடன் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு கொண்டு சென்று சாப்பிட தயாரானபோது பிரியாணி பார்சல் ஒன்றில் கோழியின் தலை கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள எர்ணாகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிரியாணி பார்சல்களை பிரித்தபோது
எர்ணா குளம் மாவட்டம் ஏலூர் பகுதியை சேர்ந்த ஒருவர் முத்தூரில் உள்ள பரோட்டா கடையில் 4 பிரியாணி பொதிகள் வாங்கியுள்ளார். அவற்றை குடும்பத்தாருடன் சாப்பிட வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார்.

வீட்டில் பிரியாணி பார்சல்களை பிரித்தபோது ஒரு பொதியில் கோழியின் முழு தலை இருந்துள்ளது.இதனை பார்வையிட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உணவகத்துக்கு சீல்
இது தொடர்பில் திரூர் நகராட்சியின் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பந்தப்பட்ட உணவகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திய பின்பு உணவகத்துக்கு சீல் வைத்து மூடியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.