;
Athirady Tamil News

குழந்தையின் கழுத்தைக் கடித்த இந்திய தாய், அடித்தே கொன்ற தந்தை: லண்டனில் பயங்கரம்

0

லண்டனில் வாழும் ஒரு இந்திய தம்பதியர், தங்கள் குழந்தையை பலமாக தாக்கிக் கொன்றுவிட்டு, விசாரணையின்போது முன்னுக்குப் பின் முரணாக பேசிவருகிறார்கள்.

குழந்தையின் கழுத்தைக் கடித்த தாய், அடித்தே கொன்ற தந்தை
வடமேற்கு லண்டனிலுள்ள Colindale என்னுமிடத்தில் வாழும் ரிங்கல்பென் ப்ரஜாபதி (Rinkalben Prajapati, 24), க்ருணால் ப்ரஜாபதி (Krunal Prajapati, 27) தம்பதியரின் மகள் ஹேஸல் (Hazel).

அவள் பிறந்து 11 வாரங்களே ஆன நிலையில், 2022ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி, லண்டன் மருத்துவமனை ஒன்றில் மரணமடைந்தாள் குழந்தை. அவளது கன்னத்தில் யாரோ கடித்த பல் தடம் பதிந்திருந்தது. உடற்கூறு ஆய்வில், குழந்தையின் மண்டை ஓடு உடைந்திருந்ததும், கால் பிசகியிருந்ததும், உடலில் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததும் தெரியவந்தது.

விசாரணையில், குழந்தையை தான் தவறுதலாக கீழே போட்டுவிட்டதாக குழந்தையின் தந்தையான க்ருணால் தெரிவித்தார்.

முன்னுக்குப் பின் முரணான தகவல்கள்
குழந்தையின் பெற்றோரிடம் நீதிமன்ற விசாரணை நடந்துவரும் நிலையில், அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின்னாக தகவல்களை அளித்து வருகிறார்கள்.

குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துவரும் முன் குளிக்க வைத்ததாக அதன் தாய் ரிங்கல்பென் கூறியிருந்தார். அப்போது குழந்தையின் கன்னத்தில் இருந்த கடிபட்ட காயம் உட்பட எந்தக் காயத்தையும் பார்க்கவில்லையா என்று சட்டத்தரணியாகிய Sally O’Neill கேட்க, இல்லை என்று கூறினார் ரிங்கல்பென்.

அவை மருத்துவமனையில் இருந்தபோது ஏற்பட்டிருக்கலாம் என தான் கருதியதாகவும் அவர் கூறியுள்ளார். அவரிடம் அவரது கணவர் தொலைபேசியில் பேசும்போது, குழந்தைக்கு என்ன ஆனது என்று என்னிடம் சொல், நான் என்ன சொல்லவேண்டும் என்று கேட்டுள்ளார் க்ருணால்.

அவர் ஏன் உங்களிடம் அப்படிக் கேட்டார் என்றால், அவர் எப்போதுமே பொய்தான் சொல்வார் என்று கூறியுள்ளார் ரிங்கல்பென்.

உடற்கூறு ஆய்வில் குழந்தை அடித்துக்கொல்லப்பட்டுள்ளதற்காக ஆதாரங்கள் தெளிவாக கிடைத்தும், தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்துவருகிறார்கள் ரிங்கல்பென்னும் க்ருணாலும். வழக்கு தொடர்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.