;
Athirady Tamil News

மொத்த மத்திய கிழக்கு நாடுகளையும் தாக்குவோம்: இஸ்ரேல் தளபதியின் மிரட்டல்

0

கடைசி ஹமாஸ் பயங்கரவாதிகளையும் இஸ்ரேல் வேட்டையாடும் என்று உயர்மட்ட இஸ்ரேலிய தளபதி ஒருவர் சூளுரைத்துள்ளார்.

தளபதி பார் எச்சரிக்கை
இஸ்ரேல் வான்படையின் உயர்மட்ட தளபதியான தோமர் பார் தெரிவிக்கையில், மொத்த மத்திய கிழக்கு நாடுகளையும் தாக்கும் வலிமை இஸ்ரேலிடம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஈரான் மற்றும் அதன் மறைமுக பயங்கரவாத குழுக்களுக்கும் தளபதி பார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹமாஸ் படைகளை சிதறிடித்து வருகிறோம் என குறிப்பிட்டுள்ள தளபதி பார், நிலத்திலும் நிலத்திற்கடியிலும் அவர்களை வேட்டையாடுவதாக தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளை வேட்டையாடியுள்ளதாக குறிப்பிட்ட பார், ஒவ்வொருவரையும் தேடிச் செல்வோம் என்றார்.

மத்திய கிழக்கு நாடுகளில் மொத்தமாக செயல்பட இஸ்ரேல் தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ள தளபதி பார், எந்த மூலையில் சென்று ஒளிந்துகொண்டாலும் விடுவதாக இல்லை என்றார்.

முட்டாள்த்தனமான முடிவாக இருக்கும்
அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலை அடுத்து, லெபனான் மற்றும் யேமனில் உள்ள ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் இஸ்ரேல் – ஹமாஸ் போரில் களமிறங்க இருப்பதாக பலமுறை அச்சுறுத்தி வருகின்றன.

மட்டுமின்றி, இந்த இரு நாடுகளில் இருந்தும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் மீது தாக்குதல் முன்னெடுத்தும் வருகின்றனர். இதனிடையே, நவம்பர் 3ம் திகதி ஈரான் தலைவர் ஹசன் நஸ்ரல்லா லெபனான் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லெபனானின் எந்த பகுதியையும் எதிரிகள் தாக்க முயல்வது அவர்களின் முட்டாள்த்தனமான முடிவாக இருக்கும் என்றும், பெரும் விலையளிக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார். மட்டுமின்றி, இஸ்ரேல் மீது ஹமாஸ் முன்னெடுத்த தாக்குதலை பாராட்டியுள்ள நஸ்ரல்லா, இது புனிதப் போர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.