;
Athirady Tamil News

கிளிநொச்சியில் திடீரென தாழிறங்கிய கிணறு

0

கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் உள்ள ஒருவரது வீட்டிலுள்ள கிணறு தாழிறங்கியுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று(21) இடம்பெற்றுள்ளது.

வீட்டிலுள்ளவர்கள் தங்களது பயன்பாட்டை முடித்து மறுநாள் காலை எழுந்து கிணற்றைப் பார்த்த பொழுது கிணறு முற்று முழுதாக தாழிறங்கியதை அவதானித்துள்ளனர்.

பாதுகாப்பற்ற பகுதி
கடந்த 20 வருடங்களுக்கு மேல் பயன்படுத்தி வந்த சுத்தமான குடிநீரை பெறக்கூடிய அயலவர்கள் பலரும் பயன்படுத்தி வந்த நிலையில் கிணறு முற்று முழுதாக தாழ் இறங்கியதைஅடுத்து வீட்டு உரிமையாளர் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளார்.

அத்துடன் கிணற்றின் சூழ உள்ள பகுதி பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதுடன் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமக்கேதேனும் ஒரு வகையில் உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தர்மபுரம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.