;
Athirady Tamil News

பிரித்தானியாவின் எக்செல் மண்டபத்தில் சிறப்புற நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

0

தாயகத்தில் மட்டுமல்லாது தமிழர்கள் வாழும் அனைத்து இடங்களிலும் மாவீரர் தினம் சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டது.

அந்தவகையில் பிரித்தானியாவின் எக்செல் மண்டபத்தில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரினை வடக்கு கிழக்குப் பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நீண்ட காலப் பணியாளரான அப்பன் என்று அழைக்கப்படும் செல்லையா கனகரத்தினம் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023ம் ஆண்டிற்க்கான பிரித்தானிய தேசியக் கொடியினை இளையோர் அமைப்பு ராஜன் ஏற்றிவைத்துள்ளார்.

பின்னர் மாவீரர்ககளுக்கான கொடி வணக்கம் செலுத்தப்பட்டது.

கடும் குளிருக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வில் பெரும்பாலான புலம்பெயர் தமிழ் மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.

நடைபெற்ற மாவீரர்நாள் நினைவு நிகழ்வின் சில பதிவுகள்

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.