கூட்டுறவுப்பெரியார் வீரசிங்கம் அவர்களுடைய 59ஆவது நினைவு தின நிகழ்வுகள்
![](https://www.athirady.com/wp-content/uploads/2023/12/Screenshot-2023-12-05-162233-750x430.jpg)
கூட்டுறவுப்பெரியார் வீரசிங்கம் அவர்களுடைய 59ஆவது நினைவு தின நிகழ்வுகள் யாழ் வீரசிங்க மண்டபத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
யாழ் மாவட்ட கூட்டுறவுச்சபையின் உபதலைவர் க.மகாதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன் கலந்துகொண்டதுடன் , கூட்டுறவுப்பெரியார் வீரசிங்கம் அவர்களுடைய திருவுருவபடத்திற்கான மலர்மாலை அணிவித்தார்.
இதனை தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களில், சிறப்பாக செயலாற்றிய 59 கூட்டுறவாளர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
மேலும்யாழ் மாவட்ட கூட்டுறவாளர் சபையினால் நடாத்தப்பட்ட மனைப்பொருளியல் பயிற்சிநெறியினை பூர்த்தி 70 மகளிர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன