;
Athirady Tamil News

வைத்தியசாலை மதில் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி

0

கடுகன்னாவ பிரதேச வைத்தியசாலையின் மதில் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த வைத்தியசாலையில், பழைய மதிலை அகற்றிவிட்டு புதிய மதில் ஒன்றை கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று நண்பகல் 12 மணியளவில் மதில் இடிந்து வீழ்ந்ததில் அந்த நபர் சிக்குண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி
எவ்வாறாயினும், அங்கிருந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலை ஊழியர்களின் உதவியுடன் விபத்தில் சிக்கிய நபரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்த போதிலும், அதற்கு முன்னராகவே அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் கடுகன்னாவ பரணபட்டிய பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ரஞ்சித் அபேரத்ன என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.