;
Athirady Tamil News

இந்திய மீன்பிடி இழுவை படகுகள் தொடர்பில் இலங்கை கடற்படை வெளியிட்ட தகவல்

0

2023 ஆம் ஆண்டில் இதுவரை 31 இந்திய மீன்பிடி இழுவை படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதுவரை 195 இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்துள்ளதாகவும், இதில் நேற்று கைது செய்யப்பட்ட 21 பேரும் அடங்குகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கடற்பரப்பில் இருந்து இந்திய மீன்பிடி இழுவை படகுகளை விரட்டியடிக்கும் விசேட நடவடிக்கையின் போதே இந்த 21 பேரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துமீறிய மீன்பிடி
மன்னார் மற்றும் கோவிலான், காங்கேசன்துறை கடற்பரப்பில் அத்துமீறி இவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.