;
Athirady Tamil News

சட்டவிரோதமாக செயல்பட்ட 19 தங்க சுரங்கங்கள்: வெடி வைத்து தகர்த்த பிரபல நாடு

0

கொலம்பியா காடுகளில் சட்டவிரோதமாக செயல்பட்ட தங்கச் சுரங்கங்கள் வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.

தங்க சுரங்கங்கள்
அமேசான் மழைக்காடுகளில் தங்கங்களை பிரித்து எடுப்பதற்காக பல்வேறு சட்டவிரோதமான தங்க சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த தங்கச் சுரங்கங்களில் இருந்து மட்டும் சுமார் 1.5 மில்லியன் டொலர் அளவிலான தங்கம் பிரித்து எடுக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆனால் இவ்வாறு சட்டவிரோதமாக செயல்படும் தங்க சுரங்கங்கள், தங்கத்தை பிரித்து எடுப்பதற்காக பாதரசம் மூலம் ஆறுகளில் சுத்திகரிப்பு வேலையை செய்கின்றன.

இதனால் குடிநீர் வளமான ஆறு முற்றிலும் மாசுபடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு வந்ததை அடுத்து, கொலம்பிய ஆயுதப்படை அமேசான் காட்டுக்குள் சோதனை வேட்டை நடத்தினர்.

இந்த சோதனையின் இறுதியில் அமேசான் காடுகளில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 19 தங்கச் சுரங்கங்களை கண்டுபிடித்தனர்.

பின், பிரேசில் நாடு உடன் சேர்ந்த கூட்டு முயற்சியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 19 சுரங்கங்களையும் வெடி வைத்து தகர்த்து இருப்பதாக கொலம்பியா அரசு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.