;
Athirady Tamil News

திருமண விழாவுக்காக ஜாமீன் பெற்ற துஷ்பிரயோக குற்றவாளி..சிறுமி மீது ஆசிட் வீசிவிட்டு தற்கொலை..அதிர்ச்சி சம்பவம்

0

இந்தியாவின் டெல்லி நகரில் துஷ்பிரயோக குற்றவாளி ஒருவர், ஜாமீனில் வெளியே வந்ததும் சிறுமி மீது ஆசிட் வீசிவிட்டு தானும் குடித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபர்
டெல்லியின் ஆனந்த் பர்பத் பகுதியில் உள்ள ஒரு காலனியில் வசித்து வந்த நபர் பிரேம் சிங் (54). இவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் 17 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் தனது குடும்ப திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக பிரேம் சிங் ஜாமீன் பெற்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு சென்ற பிரேம், அவரது தாயிடம் தன் மேல் அளிக்கப்பட்ட புகாரை வாபஸ் பெறுமாறு கேட்டுள்ளார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ஆனால் சிறுமியின் தாயார் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, 17 வயது சிறுமி மீது பிரேம் ஆசிட் வீசியுள்ளார். பின்னர் தானும் அதனை குடித்துள்ளார்.

இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரேம் சிங் உயிரிழந்தார்.

குறித்த சிறுமி சிகிச்சைக்கு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.