;
Athirady Tamil News

யாழில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் – பணிப்பாளர் சத்தியமூர்த்தி எச்சரிக்கை

0

யாழ்.மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாழ்.மாவட்டத்தில் சில மருத்துவ அதிகாரி பிரிவுகளில் அதிகளவிலான பொதுமக்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்

3 நாட்கள் காய்ச்சல் மற்றும் தலைவலி மூட்டு மற்றும் தசைகளில் நோவு, வயிற்றுவலி, வாந்திபேதி போன்ற நோய் அறிகுறி காணப்படுமாயின் மருத்துவ ஆலோசனை பெற்று குருதி பரிசோதனை செய்து டெங்கு இல்லை என்பதனை உறுதிப்படுத்த வேண்டும்.

டெங்கு நோய் உறுதிப்படுத்தப்பட்டால் தகுதியான மருத்துவர்கள் அல்லது தாதியர்கள் உள்ள தொடர் மருத்துவ கண்காணிப்பு வழங்கக்கூடிய மருத்துவமனைகளில் அனுமதி பெற்று சிகிச்சை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும் தகுதி பெறாத மற்றும் அனுமதிக்கப்படாத தொடர் கண்காணிப்பு இல்லாத மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படாது இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.