இலங்கையின் நிதித்துறையை ஸ்திரப்படுத்த கைகொடுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி
![](https://www.athirady.com/wp-content/uploads/2023/12/Screenshot-2023-12-08-183946-750x430.jpg)
இலங்கையின் நிதித்துறையை ஸ்திரப்படுத்துவதற்கான சலுகைக் கடன் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அரசாங்கத்திற்கு 200 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளது.
நிதித்துறை ஸ்திரத்தன்மை மற்றும் சீர்திருத்தத் திட்டம் உள்ளிட்ட இரண்டு துணைத் திட்டங்களுக்காக தலா 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சலுகைக்கடனாக வழங்கப்படவுள்ளது.
தொழில்நுட்ப உதவி சிறப்பு நிதியம்
இந்தக் கடனுடன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவி சிறப்பு நிதியத்தில் இருந்து 1 மில்லியன் டொலர் மானியத் தொகையும் வழங்கப்படவுள்ளது.