;
Athirady Tamil News

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 25 இந்திய மீனவர்கள்

0

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இன்று (10) அதிகாலை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்த
இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதனையடுத்து, இந்திய மீனவர்களை மயிலிட்டி துறைமுகத்தில் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க சிறிலங்கா கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் குறித்த மீனவர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.