;
Athirady Tamil News

இந்த மாநிலத்தில் சராசரியாக நாள்தோறும் மாயமாகும் 10 குழந்தைகள்

0

தெலங்கானா மாநிலத்தில் நாள்தோறும் 10 குழந்தைகள் மாயமாவதாகவும் ஆண்டுதோறும் காணாமல் போகும் குழந்தைகளில் 4 ஆயிரம் குழந்தைகள் கிடைப்பதேயில்லை என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய குற்றப் பதிவு காப்பகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின் அடிப்படையில், கடந்த 2022ஆம் ஆண்டு மட்டும் 3,443 குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார்கள். இதுவரை காணாமல் போன குழந்தைகளில் 4,097 பேர் கிடைக்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த மாநிலத்தில் மட்டும் சராசரியாக நாள்தோறும் 10 குழந்தைகள் காணாமல் போவதாகவும், ஒவ்வொரு 10 ஆயிரம் குடும்பத்தில் ஒரு குழந்தை காணாமல் போவதாகவும், கடந்த 2020 – 22ஆம் ஆண்டுகளில் மட்டும் சுமார் 10 ஆயிரம் குழந்தைகள் காணாமல்போயிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட குழந்தைகளின் விகிதம் 2022ஆம் ஆண்டு 87 சதவீதமாக உள்ளது.

ஒரு குழந்தை காணாமல் போய்விட்டதாக காவல்நிலையத்தில் புகார் கிடைக்கப்பெற்றதும், உடனடியாக, குழந்தையின் புகைப்படத்தோடு, தேடப்படும் நபர் என்ற தகவலோடு அனைத்துக் காவல்நிலையங்களுக்கும் தகவல் அனுப்பப்படும். அனைத்து வகைகளிலும் தேடுதல் பணி நடைபெறும். நான்கு மாதங்களில் காணாமல் போனவர் கிடைக்கப்பெறவில்லை என்றால், அது மனித கடத்தல் பிரிவுக்கு மாற்றப்பட்டு, அவர்கள் விசாரணை நடத்துவது நடைமுறையாக இருப்பதாக, அந்த மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.