;
Athirady Tamil News

ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல் – அண்ணாமலை கடும் கண்டனம்!

0

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பாதுகாப்பு ஊழியர்களால் ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பக்தர்கள் மீது தாக்குதல்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கோவில் பாதுகாப்பு ஊழியர்களால் தாக்கப்பட்டனர். இதில் பக்தர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உடலிலிருந்து ரத்தம் கொட்டியது.

இது தொடர்பாக போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர். இது தொடர்பான வீடியோவை பக்தர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலை கண்டனம் இந்நிலையில் பக்தர்கள் மீது கோவிலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது “நம்பிக்கை இல்லாத ஒரு அரசாங்கம்,இந்துக் கோவில்களில் இருக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.

அண்ணாமலை கண்டனம்
42 நாட்கள் விரதம் இருந்த ஐயப்ப பக்தர்கள், சபரிமலையிலிருந்து திரும்பியவுடன் ரங்கநாத சுவாமியை வழிபட விரும்பியிருக்கிறார்கள். நீண்ட வரிசையில் பக்தர்களை காத்திருக்க வைத்ததை ஐயப்ப பக்தர்கள் கேள்வி எழுப்பியதன் விளைவாக, கோவில் வளாகத்திற்குள் ரத்தக்களரி ஏற்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறையை கோவில் நிர்வாகத்திலிருந்து வெளியேற்றுவதற்கு பாஜக ஏன் விரும்புகிறது? என்பதற்கு அவர்களின் இத்தகைய ஆணவமும் ஒரு காரணம். கோவில் புனிதத்தை கெடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து சமய அறநிலையத் துறைக்கு எதிராக தமிழக பாஜகவின் திருச்சி மாவட்ட பிரிவு சார்பில் இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலுக்கு வெளியே போராட்டம் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.