;
Athirady Tamil News

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஈழத் தமிழர்களுக்காக ஒலித்த குரல்!

0

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் டான் டேவிஸ் don davis ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்யண உரிமையின் அடிப்படையில் நிரந்தரமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

நேற்றைய தினம் (12-12-2023) பிரதிநிதிகள் சபையில் உரையாற்றும் போது டான் டேவிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இலங்கையில், 2009 ஆம் ஆண்டில் தமிழர் இனப்படுகொலை புரியப்பட்டதாகக் கூறினார்.

சமீபத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெற்றதை அவர் சுட்டிக் காட்டினார்.

தமிழர்களுக்கு வழங்கப்படும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வு இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் அமைதியையும், உறுதிப்பாட்டையும் உறுதி செய்யும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.