;
Athirady Tamil News

கேரளாவில் பயங்கர விபத்து: 5 பேர் பரிதாப மரணம்

0

கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து, ஆட்டோ மீது மோதியதால் 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே குட்டிப்பாறை பகுதியை சேர்ந்த 7 பேர் நேற்று மாலை ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அப்துல் மஜித்(55) என்பவர் ஆட்டோ ஓட்டினார். அவர்கள் செட்டியங்காடு என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களின் பேருந்து எதிரே வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ சுக்கு நூறாக நொறுங்கியது.

5 பேர் மரணம்
இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் அப்துல் மஜித், தஸ்னிமா(33), அவரது குழந்தைகள் ரின்ஷா பாத்திமா(12), ரைஹா பாத்திமா(4), சகோதரி முஹ்சினா(35) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆட்டோவில் இருந்த 2 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிஸார் விரைந்துவந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலையின் திருப்பத்தில் பேருந்து வேகமாக திரும்பியதால் தவறுதலாக ஆட்டோ மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது என பார்த்தவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் ஆட்டோ ஒட்டி வந்த மஜித், தனது மகளுக்கு சில நாள்கள் திருமணம் நடைபெற உள்ள நிலையில் உயிரிழந்துள்ளார். மேலும், தஸ்னிமா என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தான் ஐக்கிய அரபு நாட்டில் இருந்து சொந்த நாட்டிற்கு வந்துள்ளார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.