;
Athirady Tamil News

கார்த்திகை பூக்கொடியின் கிழங்கை உட்கொண்ட குடும்பஸ்தர் மரணம்

0

கார்த்திகை பூக்கொடியின் கிழங்கை உட்கொண்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

இதில் கொடுக்குளாய், உடுத்துறையைச் சேர்ந்த மாரிமுத்து சுப்ரமணியம் (வயது-47) என்பவரே உயிரிழந்தவராவார்.

சில தினங்களுக்கு முன்னர் கார்த்திகை பூக்கொடியின் கிழங்கை உட்கொண்டிருந்த நிலையில் திடீர் சுகவீனம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

இம் மரணம் தொடர்பில் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா இன்று ஞாயிற்றுக்கிழமை விசாரணைகளை மேற்கொள்வார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.