;
Athirady Tamil News

மெட்ரோ ரயிலில் சிக்கிய சேலை..மகனுக்கான இறங்க முயற்சித்த பெண் மரணம்..அதிர்ச்சி சம்பவம்

0

இந்தியாவின் டெல்லி நகரில் பெண்ணொருவரின் சேலை மெட்ரோ ரயிலியில் சிக்கியதால், விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கதவில் சிக்கிய சேலை
டெல்லியின் வீர் பண்டா பைரஹி மர்க் பகுதியைச் சேர்ந்தவர் ரீனா (35). இவருக்கு 12 வயது மகளும், 10 வயது மகனும் உள்ளனர்.

இவரது கணவர் உயிரிழந்த நிலையில் ரீனா காய்கறி விற்பனை செய்து வாழ்வை நடத்தி வந்தார். இந்த நிலையில் தனது மகனை அழைத்துக்கொண்டு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

ரயில் வந்ததும் ரீனா முதலில் ஏறியுள்ளார். ஆனால் அவரது மகன் ஏறவில்லை என்பதை பின்னர் தான் கவனித்துள்ளார்.

இதனால் உடனடியாக அவர் இறங்க முயற்சித்தபோது மெட்ரோ ரயிலின் கதவு மூடியுள்ளது. அப்போது ரீனாவின் சேலை கதவில் சிக்கிக் கொண்டது.

இதில் அதிர்ச்சியடைந்து ரீனா தனது சேலையை இழுக்க முயற்சித்துள்ளார். ஆனால் அதற்குள் ரயில் புறப்பட்டுவிட்டதால் சிறிது தூரம் அவர் இழுத்துச் செல்லப்பட்டார்.

பரிதாப மரணம்
ஒரு கட்டத்தில் அவர் தண்டவாளத்தில் விழ, அவர் மீது ரயில் ஏறியுள்ளது. இதில் ரீனா படுகாயமடைந்தார். இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், இன்று சிகிச்சை பலனின்றி ரீனா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.