;
Athirady Tamil News

சென்னையில் இளம்பெண் வெட்டிக் கொலை.., முகமூடி நபர்கள் செய்த கொடூரம்

0

சென்னையில் இளம்பெண் ஒருவர் முகமூடி அணிந்த நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண்
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தம்பதியினர் சதீஸ் மற்றும் நந்தினி (27). இதில், பாலாஜி என்பவரை கொலை வழக்கில் சதீஸ் சிறையில் உள்ளார்.

இந்நிலையில், நந்தினியின் உறவினரான மதன் என்பவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக அம்பத்தூர் தொழிற்பேட்டையை அடுத்த ஐ.சி.எப்.காலனிக்கு நந்தினி சென்றார்.

அங்கு, முகமூடி அணிந்த 4 பேர் சேர்ந்த கும்பல் நந்தினியை சுற்றி வளைத்தனர். அவர்கள், நந்தினியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். இதில் படுகாயமடைந்த நந்தினி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பொலிஸார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிஸார் விரைந்து வந்து நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாலாஜியின் கூட்டாளிகள் சதீஷின் மனைவியான நந்தினியை கொலை செய்தனரா அல்லது வேறு ஏதும் காரணமா என்று பொலிஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், தனிப்படை அமைத்து முகமூடி அணிந்து வந்த நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம், பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.