;
Athirady Tamil News

கடற்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் குருநகரில் மருத்துவ முகாம்

0

யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

சர்வதேச கடற்தொழிலாளர்கள் தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கடற்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் குறித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

மருத்துவ முகாமின் ஆரம்ப நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்தொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசந்த டி சில்வா மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அதேவேளை கடற்தொழில் அமைச்சின் நடமாடும் சேவையும் குருநகர் பகுதியில் இன்றைய தினம் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.