;
Athirady Tamil News

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதிகள்: நோயை உடன் கட்டுபடுத்த நடவடிக்கை

0

மாத்தறை சிறைச்சாலையில் 08 சிறைகைதிகள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை கட்டுப்படுத்த சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய சிறைச்சாலை நடவடிக்கைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் உத்தரவின் பேரில், மாத்தறை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட புதிய கைதிகளை அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்புவதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடு
மேலும், சுகாதார பரிந்துரைகளின்படி பார்வையாளர்களை காண்பிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அத்தோடு, சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, சிறை அதிகாரிகள், சிறைக்குள் பல்வேறு நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.