;
Athirady Tamil News

யாழில். வீடொன்றின் அலுமாரிக்குள் இருந்து கசிப்பு போத்தல்கள் மீட்பு – பெண் கைது

0

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் அலுமாரிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கசிப்பு போத்தல்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த வீட்டிற்கு விரைந்த பொலிஸார் வீட்டினை முற்றுகையிட்டு , தேடுதல் நடத்தினர்.

அதன்போது வீட்டினுள் இருந்த அலுமாரி ஒன்றினுள் இருந்து , 30 போத்தல் கசிப்பினை மீட்டுள்ளனர். அதனை அடுத்து வீட்டில் இருந்த பெண்ணை கைது செய்த பொலிஸார் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.