;
Athirady Tamil News

அனைத்து அரச நிறுவனங்களும் கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ வைபவம்

0

அனைத்து அரச நிறுவனங்களும் புத்தாண்டில் தமது கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ வைபவம் நடத்தப்படவுள்ளது.

குறித்த நிகழ்வு நாளைய தினம் (01.01.2024) நடத்தப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நிகழ்வு
இந்த உத்தியோகபூர்வ வைபவம் நாளை இரவு 9 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்ட சபைகளின் தலைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.