;
Athirady Tamil News

நாளை முதல் கையடக்கத் தொலைபேசிகள் விலை பாரியளவில் உயர்வு!

0

அனைத்து வகை கையடக்கத் தொலைபேசிகளின் விலைகளும் நாளை (ஜன. 01) முதல் அதிகரிக்கப்படுமென கைத்தொலைபேசி விற்பனை மற்றும் டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை முதல் கையடக்கத் தொலைபேசி ஒன்றின் விலை சுமார் 35 வீதத்தால் அதிகரிக்கப்படும் என இன்று (டிச.31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் சமித் செனரத் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த திரு.செனரத் மேலும் குறிப்பிடுகையில்,

நாளைய தினம் அமுலுக்கு வரும் பெறுமதி சேர் வரி (VAT) 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.