;
Athirady Tamil News

நள்ளிரவு உள்ளுராட்சி மன்ற சபை முன்னாள் தவிசாளர் மீது கொடூர தாக்குதல்! ஐவர் வைத்தியசாலையில்

0

வாதுவ பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் களுத்துறை உள்ளுராட்சி சபையின் முன்னாள் தவிசாளரும், மேல் மாகாண முன்னாள் உறுப்பினருமான ஜி.என்.பி.பெரேரா உட்பட 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (28-12-2023) நள்ளிரவு வாதுவ மொல்லிகொடவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று நள்ளிரவு வாதுவ, மொல்லிகொடவில் உள்ள முன்னாள் தவிசாளரின் வீட்டில் தகராறு ஏற்பட்டதாகவும், தாக்கியவர்களைக் கண்டால் அடையாளம் காண முடியும் எனவும் முறைப்பாட்டை பதிவு செய்த பெண் பொலிஸில் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வாதுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.