;
Athirady Tamil News

திருச்சியில் வீட்டின் மேற்கூரை விழுந்ததில் 4 பேர் பலி

0

திருச்சியில் வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் ஒரே குடும்பதைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் அரியமங்கலத்தில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்து. இவரது வீட்டின் சிமெண்ட் கூரை நள்ளிரவு திடீரென பெயர்ந்து விழுந்தது. இந்த சம்பவத்தின்போது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த மனைவி விஜயலட்சுமி, மகள்கள் ஷரீனி(12), பிரதீபா(10), மாரிமுத்துவின் தாயார் சாந்தி ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர்.

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.