;
Athirady Tamil News

பாரவூர்தி மோதி கோர விபத்து: இருவர் உயிரிழப்பு..!

0

பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக கட்டுவன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேக கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி ஊருபொக்க – ருக்மல்பிட்டிய பகுதியில் வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்தநிலையில், விபத்தில் காயமடைந்த நான்கு பேரும் தங்காலை கட்டுவன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி பாரவூர்தியின் சாரதி உயிரிழந்தார்.

அத்துடன், ஏனைய மூன்று பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக வரஸ்முல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மற்றுமொருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தநிலையில், ஏனைய இரண்டு பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக கராபிடிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.