;
Athirady Tamil News

சீனா: சுரங்க விபத்தில் 10 பேர் பலி

0

மத்திய சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் நிலக்கரி சுரங்க பணியின்போது நிகழ்ந்த விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளதாகவும் 6 பேர் நிலை அறிய முடியாததாக உள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலக்கரி மற்றும் எரிவாயு வெடித்ததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.55-க்கு விபத்து நடந்தபோது சுரங்கத்தில் 425 பேர் பணியாற்றிக் கொண்டிருந்தாகவும் தெரிகிறது.

380 பேர் அங்கிருந்து மீட்கப்பட்ட நிலையில் எஞ்சியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது..

சீனாவில் சுரங்க விபத்துகள் வழக்கமானவை எனினும் சமீபத்திய ஆண்டுகளில் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நிலக்கரி உற்பத்தி மற்றும் நுகர்வில் உலகளவில் முதன்மையிடத்தில் உள்ள சீனா, அபாயகரமான மற்றும் அடிக்கடி நிகழும் சுரங்க விபத்துகளை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.