;
Athirady Tamil News

பாடப்புத்தக விநியோகம் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

0

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

பாடப் புத்தகங்கள் விநியோகம்
நேற்று (14) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களும் குறித்த தினத்திற்குள் விநியோகிக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

80% பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.