;
Athirady Tamil News

கொலம்பியா நிலச்சரிவு:37-ஆக அதிகரித்த உயிரிழப்பு

0

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

குயிபோ, மெடெலின் நகரங்களுக்கு இடையிலான மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் சிலரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.இதையடுத்து, இந்தப் பேரிடரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.எனினும், காயமடைந்தவா்களின் அண்மை விவரத்தை அவா்கள் வெளியிடவில்லை. மழை காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.