;
Athirady Tamil News

நாட்டை சோகத்தில் ஆழ்த்திய சிறுவனின் மரணம்

0

களனி ஆற்றில் நீராடச் சென்ற போது முதலை ஒன்றால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவனின் சடலம் உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப் பட்டுள்ளது.

கடுவெல வெலிவிட்ட புனித அந்தோனி மாவத்தையில் களனி ஆற்றுப்படுகையில் இந்த துயர சம்பவம் பதிவாகியிருந்தது.

திஷ்னவை இழுத்துக் சென்ற முதலை
சிறுவனின் பாட்டி துணி துவைத்துக் கொண்டிருந்த போது, ​​சிறுவன் திஷ்ன தனது தம்பியுடன் அருகில் நீராடிக் கொண்டிருந்த போது, ​​எதிர்பாராதவிதமாக அங்கு வந்த முதலை திஷ்னவை இழுத்துக் சென்றது.

அதன் பின்னர் அந்த இடத்திற்கு வந்த பொலிஸ் கடற்படை பிரிவினர் மற்றும் கடற்படை சுழியோடி அதிகாரிகள் பிரதேசவாசிகள் இணைந்து சிறுவனை தேடும் பணி முன்னெடுக்கபப்ட்டது.

இதனையடுத்து சிறுவன் நீராடிய இடத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் ஆற்றின் கீழ் பகுதியில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. முதலைவாயில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.